2010-08-20 15:45:02

அன்னை தெரேசா பிறந்ததன் நூறாவது ஆண்டை ஐரோப்பியக் கத்தோலிக்கர் சிறப்பிக்கின்றனர்


ஆக.20,2010. முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா பிறந்ததன் நூறாவது ஆண்டை ஐரோப்பியக் கத்தோலிக்கர் சிறப்பிப்பதற்குத் தயாரித்து வருகின்றனர்.

தற்போதைய மாசிடோனியக் குடியரசில் Skopje என்ற நகரில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்தார் அன்னை தெரேசா. அவர் பிறந்ததன் நூறாம் ஆண்டு இவ்வியாழனன்று உரோம், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் எனப் பல இடங்களில் மிகுந்த ஆடம்பரத்துடன் கொண்டாடப்படவிருக்கின்றது.

இக்கொண்டாட்டத்தின் நிறைவாக உரோமையில் வருகிற டிசம்பர் 19ம் தேதி சிறப்பு கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியும் நடத்தப்படும்.








All the contents on this site are copyrighted ©.