தான் இறப்பதற்கு முன்னர் தாய் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தார்
92 வயது குட்டிநாடார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள குன்னத்தூரைச்
சேர்ந்தவர். இவர் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தர். இவருக்குத் திருமணமாகி ஒரு
மகள் உள்ளார். இவ்வாண்டு இந்திய சுதந்திர தினத்தன்று தான் செய்ய எண்ணியதைச் செயல்படுத்தியிருக்கிறார்
குட்டிநாடார். இவர் தனது உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படிப்புக்காகத் தானம் செய்ய
விரும்பி நாகர்கோவில் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று முதல்வர் மோகன்ராமிடம் தனது உடலை
தானம் செய்ததற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
கலீல் இப்ரான் சொன்ன
வாழ்வின் முடிவு மரணத்தால் இல்லை என்ற கூற்றை மெய்யாக்கி இருக்கிறார் குட்டிநாடார். அன்பு
செய்யும் கலையைக் கற்றவர்க்கு எல்லாம் சாத்தியமாகும்