2010-08-18 15:49:30

அரசியல்வாதி, கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேசியதற்கு, கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் கண்டனம்


ஆக.18,2010 சுதந்திர தினத்தன்று அரசியல்வாதி ஒருவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேசியதற்கு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரஹலாத் ரெமானி என்பவர் சுதந்திர தின விழாவொன்றில் ஆற்றிய உரையில், கிறிஸ்தவம் இந்நாட்டில் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும், அதை வேருடன் களைந்தெறிய வேண்டுமெனவும் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பிரதிநிதி இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது என்றும், அவர் தான் பேசுவது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார் என்றும் பெல்காம் ஆயர் பீட்டர் மச்சாடோ கூறியுள்ளார்.
பிரஹலாத் ரெமானியின் உரை வன்முறையைத் தூண்டும் ஓர் உரை என்று கர்நாடகாவில் உள்ள கத்தோலிக்கர்கள் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து, கத்தோலிக்கர்கள் அனைவரும் இப்புதனன்று ஊர்வலம் நடத்துவர் என்று ஆயர் பீட்டர் மச்சாடோ தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.