வரும் 5 ஆண்டுகளுக்கான மேய்ப்புப் பணி திட்டத்தை வெளியிட்டுள்ளது தாய்லாந்து தலத்திருச்சபை
ஆகஸ்ட் 17, 2010. உயிருள்ள விசுவாசத்தைக் கொண்ட சமூகங்களை உருவாக்குதல் என்ற முக்கிய
நோக்கத்துடன் வரும் 5 ஆண்டுகளுக்கான மேய்ப்புப் பணி திட்டத்தை வெளியிட்டுள்ளது தாய்லாந்து
தலத்திருச்சபை. கிறிஸ்துவின் மீதான அன்புடன் அவரைத் தேடுவதிலும், பின்பற்றுவதிலும், எடுத்துரைப்பதிலும்
இறைமக்கள் ஒன்றிணைந்துச் செயல்படவேண்டும் என்ற கடந்த கால மேய்ப்புப்ப்ணித் திட்டங்களின்
தொடர்ச்சியாக இது இடம்பெறுவதாக அறிவித்தனர் அந்நாட்டு ஆயர்கள்.
பங்குதள சமூகங்களை
முன்னேற்றி அவைகளை உயிருள்ள விசுவாசத்தைக் கொண்ட சமூகங்களாக மாற்றுவதை நோக்கமாகக்கொண்ட
இம்மேய்ப்புப்பணித் திட்டமானது, அந்நோக்கத்தை இளைஞர் கல்வி, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள்,
சமூகத்திற்கான உதவி ஆகியவைகளில் விசுவாசிகளை ஈடுபடுத்துவதன் மூலம் நிறைவேற்ற உள்ளதாக
அறிவித்துள்ளது.