2010-08-17 16:27:11

மத ஒருமைப்பாட்டின் அடையாளமாக கிறிஸ்தவ குழு ஒன்று 100 குரான் பிரதிகளை இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு வழங்கியுள்ளது.


ஆகஸ்ட் 17, 2010. மத ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நடவடிக்கையாக, கிறிஸ்தவ குழு ஒன்று 100 குரான் பிரதிகளை ஆஸ்திரேலியாவின் சிறைகளில் உள்ள இந்தோனேசிய இஸ்லாமியர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தோனேசிய ஆயர் பேரவையின் சார்பாக இப்பிரதிகளை இஸ்லாமியத் தலைவரிடம் வழங்கிய குரு அந்தோனியுஸ் பென்னி சுசெத்தியோ, மனித குலத்தின் மீதான அன்பின் அடிப்படையில் நட்பையும் பேச்சுவார்த்தைகளையும் கட்டியெழுப்பும் பணியாகும் இது என்றார்.

குடியேற்றச் சட்டங்களை மீறி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்ததால் சிறைவைக்கப்பட்டிருக்கும் இந்தோனேசிய இஸ்லாமியர்களிடையே பணியாற்றும் ஆஸ்திரேலிய அமல மரி தியாகிகள் சபை குரு டேவிட் ஷெல்டன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 குரான் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.