இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவர் ஃப்ரன்செஸ்கோ கோஸிகாவின் மரணம் குறித்து திருத்தந்தை
ஆழ்ந்த கவலை.
ஆகஸ்ட் 17, 2010. இச்செவ்வாயன்று இத்தாலியின் முன்னாள் பிரதமரும் அரசுத்தலைவருமான ஃப்ரன்செஸ்கோ
கோஸிகா மரணம் அடைந்ததைக் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவரின் ஆன்ம
இளைப்பாற்றிக்காகச் செபிப்பதாகவும் திருப்பீடப் பத்திரிகைத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
82
வயதான இத்தாலிய முன்னாள் பிரதமர் கோஸிகா இச்செவ்வாயன்று பிற்பகல் இத்தாலிய நேரம் 1மணி
18 நிமிடத்திற்கு காலமானார்.
நோய் காரணமாக ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த இவ்வரசுத்தலைவரைத் திருத்தந்தையின் பெயரால் சென்று சந்திக்க பேராயர்
ரீனோ ஃபிஸிக்கெல்லாவைத் திருப்பீடச்செயலர் சில நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.