தாய் நாட்டிற்கான செபத்துடன் சுதந்திர தின விழாவைச் சிறப்பித்துள்ளன இந்தியப் பங்குதளங்கள்
ஆகஸ்ட் 16, 2010 இந்தியாவின் நூற்றுக்கணக்கான கத்தோலிக்கப் பங்குதளங்கள் சுதந்திர தினமான
ஞாயிறன்று விசுவாசிகளுடன் இணைந்து கொடியேற்றி, தேசத்திற்கானச் சிறப்புச் செபங்களுடன்
அந்நாளைச் சிறப்பித்துள்ளன.
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில் தேச நலனுக்கானச்
சிறப்புச் செப வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியப் பங்குதளங்கள், இவ்வாண்டு
இந்நாள் ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும்
இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக,
பல ஊர்களில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து சுதந்திர தினத்தைச் சிறப்பித்துள்ளன.