ஆகஸ்ட் 15, இந்தியா ஆஙகிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாள். இந்த நாள் இந்திய
நாட்டுக்கு மட்டும் விடுதலை நாள் அல்ல. 1824 – அமெரிக்காவிலிருந்து விடுதலை அடைந்த
அடிமைகள் சிலர் ஆப்ரிக்காவில் லிபெரியா என்ற நாட்டை உருவாக்கிய நாள் ஆகஸ்ட் 15. 1945
- கொரியா விடுதலை பெற்றது; 1948 - தென் கொரியா உருவாக்கப்பட்டது; 1960 - ஆப்ரிக்காவில்
காங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது... இவை அனைத்தும் நிகழ்ந்தது
ஆகஸ்ட் 15. எனவே, ஆகஸ்ட் 15 உலகின் பல நாடுகள் விடுதலை உணர்வுகளில், எண்ணங்களில்
ஊறித் திளைக்கும் ஒரு நாள். விடுதலை என்பது என்ன? இதோ, ஒரு சிலரது எண்ணங்கள்:
அடிமை ஒருவர் இனி தான் அடிமையாக வாழப்போவதில்லை என்று தீர்மானிக்கும்
போது, அவரது விலங்குகள் அறுந்து விழுகின்றன. விடுதலை, அடிமைத்தனம்
இரண்டும் மனநிலைகளே. இதைச் சொன்னவர் மகாத்மா காந்தி (Mahatma Gandhi) சட்டம்
மனிதர்களை விடுவிக்காது, மனிதர்களே சட்டத்தை விடுவிக்க வேண்டும் என்று
ஹென்றி டேவிட் தோரோ (Henry David Thoreau)சொன்னார். தங்களைச்
சிறைபடுத்தும் சங்கிலிகளை வணங்கும் முட்டாள்களுக்கு விடுதலை அளிப்பது கடினம் என்றார்
வோல்ட்டேர் (Voltaire) விடுதலை என்பது மனிதர்கள் மேல் இறங்கி
வராது, மனிதர்கள்தான் விடுதலையை நோக்கி மேலெழுந்து செல்ல வேண்டும்
என்றார் சார்ல்ஸ் கேலப் கோல்ட்டன் (Charles Caleb Colton)
மேலெழுந்து
செல்லும் விடுதலைக்கு உயர்ந்ததோர் அடையாளம் நம் அன்னை மரியா. ஆகஸ்ட் 15 – அன்னை மரியாவின்
விண்ணேற்புப் பெருவிழா.