மலேசியா - ஆலய எரிப்பு வழக்கில் இரண்டு முஸ்லீம்களுக்குத் தண்டனை
ஆக.13,2010: மலேசியாவில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு முஸ்லீம்
இளைஞர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடவுளைக் குறிப்பதற்கு
“அல்லா” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் மலேசிய நீதிமன்றம்
கிறிஸ்தவர்களுக்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 11 கிறிஸ்தவ ஆலயங்கள்,
மூன்று மசூதிகள், ஒரு சீக்கிய கோவில் போன்றவை தாக்கப்பட்டன.
கடந்த சனவரியில் Metro
Tabernacle கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டது தொடர்பாக 24 வயது Raja Muhammad Faizal Raja
Ibrahim, 22 வயது Raja Muhammad Idzham Raja Ibrahim ஆகிய இருவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை
இவ்வெள்ளியன்று விதிக்கப்பட்டது