கொரியாவில் கத்தோலிக்கக் குருக்களும், பிற கிறிஸ்தவ சபை போதகர்களும் சேர்ந்து தியானத்தில்
ஈடுபட உள்ளனர்
ஆகஸ்ட் 11, 2010 கொரிய நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கக் குருக்களும், பிற கிறிஸ்தவ சபை
போதகர்களும் சேர்ந்து ஆகஸ்ட் 16 முதல் 18 வரை தியானத்தில் ஈடுபட உள்ளனர்.
Kwangju
உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Hyginus Kim Hee-joong உட்பட பல கத்தோலிக்கக் குருக்களும்
பிற சபை போதகர்களும் வரும் வாரம் மூன்று நாட்கள் Busan நகரில் உள்ள புனித பெனடிக்ட் தியான
மையத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கொரிய
கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஓர் அங்கமான கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலுக்கான
பணிக்குழுவினால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறதென்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
கிறிஸ்தவ
ஒன்றிப்புக்கான முயற்சிகளில் இந்த தியானம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று இப்பணிக்
குழுவின் ஒருங்கிணைப்பாளர் Stephen Yang Deog -chang கூறினார்