இலங்கையில் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இவைகளை உருவாக்குவது நமது கடமை - கொழும்புப் பேராயர்
ஆகஸ்ட் 11, 2010 இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார்,
மற்றும் மக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் கொழும்புவில் அண்மையில் நடந்ததென்று இச்செவ்வாயன்று
தகவல் வெளியானது.
நாட்டின் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்னும் துன்புறும்
மக்களுக்கு உதவிகள் செய்வதும், உரையாடல் வழியாக, நாட்டில் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இவைகளை
உருவாக்குவதும் நமது கடமை என்று கொழும்புப் பேராயர் மால்கம் ரஞ்சித் கூறினார்.
இலங்கையின்
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தற்போது உள்ள இராணுவ நடமாட்டம் குறைந்து, விரைவில் மக்கள்
சுதந்திரமாக இருக்கவும், அங்கு நடைமுறையில் உள்ள அவசர காலச் சட்டங்கள் தளர்த்தப்படவும்
கூடியிருந்த அனைவரும் மிகவும் வலியுறுத்துவதாக இக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது