2010-08-10 16:46:05

கர்நாடகாவில் கிறிஸ்தவ பெண் பாதிரியார் ஒருவரை இந்து திவீரவாதிகள் சிலர் தாக்கியுள்ளனர்.


ஆகஸ்ட்  10, 2010.      குழந்தைகளுக்கான விடுதியில் கர்நாடகாவில் பணியாற்றிக்கொண்டிருந்த கிறிஸ்தவ பெண் பாதிரியார் ஒருவரை இந்து திவீரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் சிலர் தாக்கியுள்ளனர்.

கர்நாடகாவின் சித்ரதுர்கா எனுமிடத்திலுள்ள  விடுதியில் குழந்தைகளுக்கான வழிபாட்டை நடத்திக்கொண்டிருந்தபோது இஞ்ஞாயிறன்று 12 பேர் கொண்ட குழுவால் தாக்கப்பட்டுள்ளார் 30 வயதான ஹேமா நாயக் என்ற கிறிஸ்தவ பெண் பாதிரியார்.

இப்பெண் பாதிரியார் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும், இதனால் எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவ மறையைத் தழுவியுள்ளதாகவும் குற்றம் சாட்டி இவரைத் தாக்கியுள்ளது அக்குழு.

இதற்கிடையே, இத்தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யச்சென்ற சில கிறிஸ்தவ பாதிரியார்களும் இக்கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.