2010-08-10 16:46:32

இந்திய கிராம இளைஞர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுடன் புதிய ஆண்துறவு சபை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.


ஆகஸ்ட்  10, 2010.      இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் உள்ள கிராம இளைஞர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுடன் புதிய ஆண் துறவு சபை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

கிரிஷ்நகரில் துவக்கப்பட்டுள்ள இயேசுவின் திரு இதய ஆராதனை சகோதரர்கள் சபையின் நோக்கம் செபிப்பதும் பணிபுரிவதும் என்றார் கொல்கத்தா பேராயர் லூக்காஸ் சிர்கார்.

இத்துறவு சபையின் சகோதரர்கள் கிராம இளைஞர்களுக்குக் கால்நடை பராமரிப்பு, தச்சுத்தொழில், விவசாயம், வெல்டிங் எனும் பற்ற வைப்புத் தொழில், ஓட்டுனர் தொழில் ஆகியவற்றில் பயிற்சி வழங்குவர் என்றார் பேராயர்.

ஒவ்வொரு நாளும் மூன்றரை மணி நேரத்தை ஜெபத்திலும் திருநற்கருணை ஆராதனையிலும் செலவிடும் இச்சகோதரர்கள், செபத்தைச் செயல்படுத்தும் ஆன்மீகத்தைக் கொண்டிருப்பர் என மேலும் கூறினார் பேராயர் லூக்காஸ் சிர்கார்.








All the contents on this site are copyrighted ©.