1833ல் கர்தினால் ஜான் ஹென்றி நியுமன் எழுதிய ஓர் அழகான கவிதை, இன்று உலகில் Lead Kindly
Light என்ற பாடலாக பாடப்படுகிறது. அந்தக் கவிதையின் முதல் சில வரிகள் இவை: சூழ்ந்து
வரும் இருளிலிருந்து, ஒளியே, என்னை
வழிநடத்து. இருள் என்னை அதிகம் சூழ்ந்துள்ளது. வீட்டிலிருந்து
வெகு தூரத்தில் நான் இருக்கிறேன். என்னை வழிநடத்து. என் பாதங்களை உறுதியானப்
பாதையில் பதிக்க உதவிடு. வெகு தூரத்துக் காட்சியைக் காட்டு என்று உன்னை
நான் கேட்கவில்லை.நான் எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடிக்கு மட்டும் ஒளி
காட்டு. அதுவே போதும்.