2010-08-09 15:02:34

புதிய சமுதாயம் அமைக்க கர்நாடகாவின் 560 கத்தோலிக்க இளைஞர்களின் உறுதிமொழி.


ஆகஸ்ட் 09, 2010. விவிலிய மதிப்பீடுகளின் அடிப்படையில் தலைமைத்துவ பண்புகளுடன் புதிய சமுதாயம் அமைக்க கர்நாடகாவின் 560 இளைஞர்கள் ஒன்றிணைந்து உறுதிமொழி பூண்டுள்ளனர்.

கர்நாடக ஆயர்பேரவையால் 12 கத்தோலிக்க மறைமாவட்டங்களின் 560 இளைஞர்களுடன் பெல்லாரி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் மாநாட்டில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. கர்நாடக ஆயர்பேரவையின் இளைஞர்களுக்கான அவையின் தலைவர் ஆயர் ஹென்றி டி சூஸாவின் முன்னிலையில் இத்தீர்மானத்தை எடுத்த கர்நாடக கத்தோலிக்க இளைஞர்கள், இம்மூன்று நாள் கருத்தரங்கின் போது 'இறைவார்த்தையை வாழ்ந்து உலக விடுதலைக்காக உழைத்தல்' என்ற தலைப்பில் விவாதங்களை நடத்தினர்.








All the contents on this site are copyrighted ©.