1509 - கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே
பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போரின்
போது, டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜான்ஸன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தார்.
டென்னசியின் ஆப்ரிக்க அமெரிக்கர்களால் இந்நாள் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது. 1942
- இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. 1949 – பூடான் சுதந்திரம் பெற்றது.1988 - மியான்மாரில் மக்களாட்சியை
வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.