பாகிஸ்தான் உலகின் மிக ஆபத்தான நாடு, பிரிட்டன் கத்தோலிக்க இதழ்
ஆக.03,2010. இக்காலத்தில் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடாக இருக்கின்றது என்று அடிக்கடி
ஊடகங்களில் சொல்லப்படுவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன என்று பிரிட்டன் கத்தோலிக்க
வார இதழான ஹெரால்டு அறிவித்தது.
பாகிஸ்தான் கிறிஸ்தவருக்கு எக்காலத்தையும்விட
தற்போது பிரிட்டன் கத்தோலிக்கரின் செபத்துடன்கூடிய ஆதரவு தேவைப்படுகிறது என்றும் அந்த
இதழின் ஆசிரியர் பக்கம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் தினமும் எதிர்கொள்ளும்
அச்சுறுத்தல்களோடு ஒப்பிடுகையில் பிரிட்டனில் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு
எப்பொழுதாவது கஷ்டமாக உணர்வது ஒன்றுமே இல்லை என்று அவ்விதழ் கூறியுள்ளது.
இதற்கிடையே,
கராச்சியில் ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஹைடர் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டதைத்
தொடர்ந்து மூண்ட மோதல்களில் சுமார் 34 பேர் இறந்துள்ளனர்.