2010-08-03 15:59:11

கொலம்பியாவில் மனித வாழ்வைப் பாதுதாப்பதற்கு நடவடிக்கை


ஆக.03,2010. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கருவில் வளரும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்கும் பொது அறிக்கையில் முப்பது அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆளுனர்கள், நகர மேயர்கள், உயர்மட்ட நகர நிர்வாகிகள் என முப்பது அதிகாரிகள், கொலம்பிய ஆளுனர்களின் பத்தாவது கூட்டத்தில் கையெழுத்தான இவ்வறிக்கையில் சிறாரைப் பாதுகாப்பதற்குக் குடும்பங்கள், சமூகம் மற்றும் அரசுக்கு இருக்கும் கடமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

குழந்தை பிறக்கும் முன்னரும் பிறந்த பின்னரும் அவர்களுக்குப் பாதுகாப்பும் அக்கறையும் காட்ட வேண்டியதன் அவசியமும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.