நீதித்துறைக்கும் சட்டமன்றத்திற்கும் இடையிலான மோதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என அழைப்பு
விடுத்துள்ளது எல்சல்வதோர் தலத்திருச்சபை.
ஆகஸ்ட் 02, 2010. எல்சல்வதோர் நாட்டில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடலாம் எனத்
தீர்ப்பு வழங்கியுள்ள நீதித்துறைக்கும், அவர்கள் போட்டியிடுவதை எதிர்க்கும் சட்டமன்றத்திற்கும்
இடையிலான மோதல்கள் தவிர்க்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது தலத்திருச்சபை.
கட்சி
சார்பின்றி தேர்தலில் போட்டியிடுவதற்கான சுயேட்சைகளின் உரிமை மதிக்கப்பட வேண்டும் எனக்
கூறிய சான் சல்வதோர் பேராயர் ஹோசே லூயிஸ் எஸ்கோபார் அலாஸ், இதே கருத்தை வலியுறுத்தியுள்ள
நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்றார்.
பாரளுமன்றத்திற்கும்
நீதித்துறைக்கும் இடையில் எழுந்துள்ள மோதல்களைக் களைய, மனம் திறந்த அதேவேளை, நல்மனதுடன்
கூடியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் பேராயர்.