2010-07-31 15:36:50

ஆகஸ்ட் 01, நாளும் ஒரு நல்லெண்ணம்


ஜூலை 31 புனித இலோயோலா இஞ்ஞாசியாரின் திருவிழா. இயேசு சபையை நிறுவியவரும், ‘இந்தியாவின் அப்போஸ்தலர்’ என்று புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியாரை இந்திய மண்ணுக்கு அனுப்பி வைத்தவருமான புனித இஞ்ஞாசியார் இறைவனை நோக்கி எழுப்பிய ஓர் அழகான செபம் இதோ:
இறைவா, தாராள மனதை எனக்குத் தாரும்.
உமக்கு உகந்த சேவையாற்ற எனக்குச் சொல்லித் தாரும்.
கணக்குப் பார்க்காமல் கொடுக்கவும்,
காயங்களைப் பார்க்காமல் போரிடவும்,
ஓய்வைப் பார்க்காமல் உழைக்கவும்,
பலன்களை எதிர்பார்க்காமல் பணிகள் செய்யவும் சொல்லித் தாரும்.
உமது திருவுளத்தை நிறைவேற்றுகிறேன் என்ற
உறுதி மட்டும் எனக்குப் போதும், இறைவா.(St Ignatius of Loyola - Prayer for Generosity)







All the contents on this site are copyrighted ©.