மியான்மாரில் புனிதர்கள் சுவக்கீன் அன்னாள் விழாவன்று பெற்றோர் கவுரவிக்கப்படுகின்றனர்
ஜூலை27,2010: மியான்மாரில் புனிதர்கள் சுவக்கீன் அன்னாள் விழாவன்று, குடும்ப உறவுகளைப்
பலப்படுத்தல் மற்றும் இளையோர் தங்கள் பெற்றோரை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து 1950
களிலிருந்து ஆண்டுதோறும் வலியுறுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில்
அந்நாட்டில் பெற்றோர் கவுரவிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு
பல பங்குகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் பெற்றோர் தினத்தைக் கடைபிடித்தன என்றும், லோய்க்காவ்
பங்கில் ஆயர் Stephen Tjephe நடத்திய ஞாயிறு திருப்பலிக்குப் பின்னர் பிள்ளைகள் தங்கள்
பெற்றோருக்கு மரியாதை செலுத்தினர் என்றும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
லோய்க்காவ்
பங்கு நடத்திய தியானத்தில் சுமார் 170 பெற்றோர் கலந்து கொண்டனர் என்றும் அவர்களில் நல்லதொரு
மாற்றத்தைக் காண முடிந்தது என்றும் அருள்திரு Celso Ba Shwe தெரிவித்தார்.