2010-07-27 15:00:03

ஜூலை, 28நாளுமொரு நல்லெண்ணம்


David L. Weatherford என்பவர் எழுதிய ஒரு கவிதையின் கடைசி வரிகள் இவை:

ஓரிடத்தை அடைய வேண்டும் என்ற கவலையில், ஆர்வத்தில், வெறியில்...

அவ்விடத்தை அடைய நாம் மேற்கொள்ளும் பயணத்தை இரசிக்காமல் போகிறோம்.

பயணப் பாதையை, பாதையின் அழகைப் பார்க்காமல் போகிறோம்.

திறக்காமலேயே எறிந்துவிடும் பரிசுப் பொருள்கள் போல

வாழ்க்கையில் பலவற்றை நாம் அனுபவிக்க மறுக்கிறோம்.

வாழ்க்கை ஓட்டப் பந்தயமல்ல, எப்போதும் ஓடிக்கொண்டிருக்க.

நிதானமாக நடந்து செல்ல முயலுங்கள்.
பாடல் முடிவதற்கு முன், அதன் இசையைக் கேட்க முயலுங்கள்.







All the contents on this site are copyrighted ©.