ஜூலை24,2010. கென்யாவில் வருகிற ஆகஸ்ட் நான்காம் தேதி பொது மக்கள் கருத்து வாக்கெடுப்புக்கென
முன்வைக்கப்படும் புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வைத் தூண்டி
வருகின்றது அந்நாட்டுத் தலத்திருச்சபை.
ஆப்ரிக்க நாடான கென்யாவில் தற்சமயம் கருக்கலைப்பு
சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும்வேளை, அந்நாட்டில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல்
அமைப்பு கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதிப்பதற்கானப் பாதைகளை எளிதாக்குவது போல் தெரிகின்றது
என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், கென்யக் கத்தோலிக்கர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு
ஆயர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.