2010-07-23 16:20:32

சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவிகள் தேவை - சர்வதேச காரித்தாஸ் தலைவர்


ஜூலை23,2010 சமுதாயத்தால் ஓரங்கட்டப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்குப் பரிவும் ஒருமைப்பாடும் காட்டுவதன் மூலம் அந்நோயை ஒழிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்குக் கத்தோலிக்கர் ஆதரவு அளிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தார் சர்வதேச காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச் செயலர் Lesley-Anne Knight .

ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த 18வது சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆன், எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV கிருமிகளால் தாக்கப்படுவோர் எத்தகைய சூழல்களில் இந்நிலைக்கு ஆளாகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

வியன்னாவில் நடைபெற்ற இந்த ஒரு வாரக் கருத்தரங்கில் 23 நாடுகளின் கத்தோலிக்க நிறுவனங்களிலிருந்து நூறு பேர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.