2010-07-17 16:42:47

ஜூலை 18, நாளுமொரு நல்லெண்ணம்


“நமக்கு முன்னிருக்கும் மலையை விட நாம் அணிந்திருக்கும் காலணிக்குள் புகுந்துவிடும் மணல்துளிகள்தாம் நம்மை அதிகம் உறுத்துகின்றன.” என்று சொன்னார், Robert W. Service என்ற கவிஞர்.
மணல் துளிகளாய் நம்மை உறுத்தும், பயமுறுத்தும் பிரச்சனைகளைச் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அவைகளைத் தீர்க்கும் வழிகளும் இருக்கும்.
“எதிரிகள் நம்மைச் சுற்றிலும் வளைத்துக் கொண்டுள்ளனர்.” என்று வீரன் தன் தளபதியிடம் சொன்னபோது, “பிரமாதம். நாம் எப்பக்கமும் தாக்குவதற்கு இது நல்லதொரு வாய்ப்பு.” என்று தளபதி சொன்னாராம்.
“சவால்களைக் கண்டு நான் பயந்து ஓடுவதில்லை. சவால்களை நோக்கி ஓடுவேன். பயத்தை மேற்கொள்ள சிறந்த வழி எது தெரியுமா? பயத்தை நோக்கி ஓடி, அதை நம் காலடிக்குக் கீழ் மிதிப்பதே சிறந்த வழி.”
இதைச் சொன்னவர் Nadia Comaneci என்ற விளையாட்டு வீராங்கனை. இவர் 1976ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், gymnastics பிரிவில் முதல் முறையாக பத்துக்குப் பத்து என்ற மதிப்பெண் பெற்றார். அதுவரை இந்தச் சாதனையை உலகில் யாரும் செய்ததில்லை.
இந்த உலகச் சாதனையை Nadia செய்த நாள் ஜூலை 18.

It isn't the mountain ahead that wears you out; it's the grain of sand in your shoe.
Robert W. Service
I don't run away from a challenge because I am afraid. Instead, I run toward it because the only way to escape fear is to trample it beneath your feet. Nadia Comaneci







All the contents on this site are copyrighted ©.