2010-07-17 15:43:42

ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக பேராயர் பிரான்சிஸ் அசிசி சுல்லிகாட்


ஜூலை17,2010 ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக பேராயர் பிரான்சிஸ் அசிசி சுல்லிகாட்டை இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கேரளாவின் போல்காட்டியில் 1953ம் ஆண்டு பிறந்த பேராயர் சுல்லிகாட், 1978ல் கேரளாவின் வெராபொலி மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருப்பீடத் தூதரகப்பணியில் 1988ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தனது பணியைத் தொடங்கிய பேராயர் சுல்லிகாட், 2006ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி, ஜோர்டன் மற்றும் ஈராக்கின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார்.

இச்சனிக்கிழமையன்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பேராயர் சுல்லிக்காட்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக இவருக்கு முன்னர் பணியாற்றிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, போலந்துக்கானத் திருப்பீடத் தூதராக கடந்த ஜூன் 30ம் தேதி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.