உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இழிநிலை கூட வாயைச் சார்ந்தது
அல்ல. அது மனதின் கட்டளை. வாய் என்பது வெறும் கருவியே.
சிந்தனைவாதிகளிடம் விளக்கம்
கேட்டால், "உள்ளத்தே உள்ளதே உண்மை என்றும், வாய் வழியே வரும்போது வாய்மை என்றும், மெய்
எனும் உடல் துணையால் செயல் வடிவம் பெறும்போது 'மெய்' " என்றும் கூறுவர்.
உண்மை
என்பது வன்மையானது. பொய் கூறாமை என்பது தவம் போன்றது.
கவனமாக இருங்கள்.
பேச
இயலாமையால் பொய்யும் மெய்யாகிவிடக்கூடும்.
ஓர் உண்மை தெரியுமா?
வாய்மைக்கே
வாழ்க்கைப்பட்ட மகாத்மா காந்தி இறந்த ஆண்டில் யாருக்குமே நொபல் அமைதி விருது வழங்கப்படவில்லை.
அமைதிக்கென உழைத்தவர் எவரும் அந்த ஆண்டு உயிருடன் இல்லை என காந்தியை இவ்விதமாய் கௌரவித்தது
அந்த நொபல் நிறுவனம்.
வாய்மையால் இழப்பது அதிகம் தான். ஆனால், உலகத்தை புரிந்து
கொள்ளவேண்டுமா?