கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி
செய்ய வேண்டும் என்கிறார் அம்மாநில ஆளுனர்.
ஜூலை 12, 2010 கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை
உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்தியுள்ளார் அம்மாநில ஆளுனர் Hans
Raj Bhardwaj.
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் எங்கு, எப்போது இடம்பெற்றாலும்
அவைகளைத் திருத்தி அமைக்கவேண்டியது அரசின் கடமையாகின்றது என்ற ஆளுனர், கடந்த கால தாக்குதல்களுக்காக
அரசு மனம் வருந்துவதைத் தன்னால் தற்போது காண முடிகின்றது எனவும் கூறினார்.
எழைகளுக்கென
கிறிஸ்தவ சமூகம் ஆற்றியுள்ள பெரும் பங்களிப்பு குறித்து பாராட்டுக்களையும் வெளியிட்டார்
ஆளுனர் Bhardwaj.