ஜூலை 07, 2010 மங்கோலியாவில் Ningxia பகுதியில் ஒரு குருவும், ஒரு அருட்சகோதரியும் இச்செவ்வாயன்று
கொலையுண்டனர். அருள்தந்தை Joseph Shulai Zhangம், அருட்சகோதரி Mary Wei Yanhulம் அவரவர்
வாழும் இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தனர். இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில்
உள்ள நபர்களும், கொலைகளுக்கான காரணங்களும் இன்னும் அறியப்படவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.Ningxia
பகுதியில் அரசின் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் திருச்சபையின் முதன்மை குருவாக அருள்தந்தை
Joseph Shulai Zhang பணி செய்து வந்தார் என்றும், அருட்சகோதரி Mary Wei Yanhul அப்பகுதியில்
முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வந்தார் என்றும் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.