ஆங்கிலத்தில் Attitude என்று சொல்வதைத் தமிழில் வாழ்வைக் குறித்த ஒருவரின் மனநிலை, பார்வை,
நோக்கு எனச் சொல்லலாம். ஒருவரது வாழ்வை நிர்ணயிக்க உதவும் ஒரு சில எண்ணங்கள் இதோ:
முட்டையை வெளியிலிருந்து உடைத்தால், உள்ளிருக்கும் உயிர் அழிந்து விடும்.
அதே முட்டை உள்ளிருந்து உடைபட்டால், உயிர் வெளிவரும். ஒருவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை
எந்த வித சந்தேகமும் இல்லாமல், முழுமையாக இருக்க வேண்டும். இப்படி நாம் வைக்கும் நம்பிக்கை
வாழ்க்கைக்குத் தேவையான இரு முடிவுகளைத் தரும்: ஒரு மிகச் சிறந்த நண்பர், அல்லது ஒரு
நல்ல பாடம். தற்பெருமைக்காக ஒருவரது உண்மை அன்பை இழப்பதற்கு பதில், அந்த அன்பைப் பெறுவதற்குத்
தற்பெருமையை இழப்பது மேல்.