2010-07-03 15:34:01

மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட முதலமைச்சரிடம் கிறிஸ்தவத் தலைவர்கள் கோரிக்கை


ஜூலை03,2010 மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் களைவதற்கு அம்மாநில முதலமைச்சர் உதவுமாறு கேட்டுள்ளளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஏறக்குறைய 40 கிறிஸ்தவ பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தை பொதுவான சாலையில் நிறுத்தி மூன்று மணிநேரம் அவர்களைக் கேள்விகளால் நச்சரித்துள்ள இந்து தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அத்தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

மாநில முதலமைச்சருக்கென எழுதிய இந்த விண்ணப்ப மனுவை ஆறுபேர் அடங்கிய குழு, போபால் மாவட்ட ஆளுனரிடம் சமர்ப்பித்துள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்தக் கிறிஸ்தவ மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து இன்டோரிலுள்ள பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இவ்வாறு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.