ஜூலை 7ம் தேதி காஸ்தெல் கன்டோல்போவிற்கு கோடை விடுமுறைக்கெனச் செல்கிறார் திருத்தந்தை
ஜூலை02,2010. இம்மாதம் 7ம் தேதி புதன்கிழமையன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கோடை விடுமுறைக்கென,
காஸ்தெல் கன்டோல்போவிலுள்ள (Castel Gandolfo) பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் செல்வார்
என்று அறிவிக்கப்படடுள்ளது.
உரோமைக்கு தெற்கே சுமார் 25 கிலோ மீட்டரில் உள்ள காஸ்தெல்
கன்டோல்போவில் திருத்தந்தை இருக்கும் நாட்களில் அவரின் அதிகாரப்பூர்வத் தனிப்பட்ட மற்றும்
சிறப்புச் சந்திப்புகள் இடம் பெறாது.
ஜூலை 14, 21, 28 ஆகிய தேதிகளில் புதன் பொது
மறைபோதகங்களும் இடம் பெறாது. ஞாயிறு மற்றும் திருவிழாக் காலங்களின் மூவேளை செப உரைகள்
Castel Gandolfoவில் இடம் பெறும்.
மீண்டும் திருத்தந்தையின் வழக்கமான புதன் பொது
மறைபோதகங்கள் ஆகஸ்ட் 4ம் தேதியிலிருந்து தொடங்கும் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.