2010-07-02 16:24:08

இளையோர் இயேசு கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்படுவதற்கு இவ்வுலக தினம் நல்ல வாய்ப்பாக அமைகின்றது - திருத்தந்தை


ஜூலை02,2010 2011ஆம் ஆண்டு உலக இளையோர் தினத் தயாரிப்புக் குழுவின் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இளையோர் இயேசு கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்படுவதற்கு இவ்வுலக தினம் நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்று கூறினார்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத் தயாரிப்புக் குழுவின் பிரதிநிதிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இந்தப் பணியில் தாராளமனதுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறும் இப்பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டார்.

இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருபொழுதும் ஏமாற்றப்படமாட்டார்கள் எனவும் அவர்கள் வாழ்க்கையில் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் எனவும் கூறினார் திருத்தந்தை.

"மத்ரித் வாழ்கிறது" என்ற தலைப்பில் இந்தத் தயாரிப்பு குழு இயங்கி வருகிறது







All the contents on this site are copyrighted ©.