2010-06-28 15:49:49

ஜூன் 29 நாளும் ஒரு நல்லெண்ணம்


“காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள். நம்பிக்கை மிக்கவர்கள் திசை மாறக் காத்திருப்பார்கள். எதார்த்தமானவர்கள் காற்றின் திசைக்கு ஏற்பத் தங்கள் படகைத் திருப்பிக் கொள்வார்கள்” - இதைச் சொன்னவர் வில்லியம் ஆர்தர் வார்டு.

“புத்தகங்களைப் படிக்காத ஒருவன் எழுதப்படிக்கத் தெரியாதவனைவிட சாதகமான நிலையைப் பெற முடியாது” - இதைச் சொன்னவர் மார்க் டுவைன்.

“ஒரு வெள்ளாட்டை, முன்னால் இருந்தும்,

ஒரு குதிரையைப் பின்னால் இருந்தும்

முட்டாளை எந்தப் பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்”

“இறந்த காலத்தைக் கடவுளின் இரக்கத்திலும்

நிகழ்காலத்தைக் கடவுளின் அன்பிலும்

எதிர்காலத்தைக் கடவுளின் பராமரிப்பிலும் விட்டுவிடு”

“பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பது அல்ல, மாறாக அது ஆன்மாவின் ஏக்கமாகும்” - இவை வலையத்தில் வாசித்த பதிவுகள்.








All the contents on this site are copyrighted ©.