2010-06-26 16:14:33

சித்ரவதை எச்சூழ்நிலையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது - ஐ.நா.பொதுச்செயலர்


ஜூன்26,2010 எச்சூழ்நிலையிலும், அது போரின் போதோ அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையிலோ அல்லது அரசியல் பிரச்சனையின் போதோ அல்லது எந்தப் பொதுவான அவசரகால நேரத்திலோ, எந்நேரத்திலும் சித்ரவதைப் பயன்படுத்தப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.

சித்ரவதையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் உலக நாள் இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், சித்ரவதை, இன்னும் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றது அல்லது அது சகித்துக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்ரவதைக்குப் பலியாகியிருக்கும் இலட்சக்கணக்கான மக்களுடனானத் தனது தோழமை உணர்வைத் தெரிவித்துள்ள அதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் மறுவாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.