ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் பொதுப்பேரணிக்கு கிறிஸ்தவக் குழுக்கள் வேண்டுகோள்
ஜூன்25,2010 ஹாங்காங்கில், தேர்தல் சீர்திருத்த விதிமுறைகள் இவ்வெள்ளியன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளவேளை,
ஜூலை ஒன்றாந்தேதி இடம் பெறும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் பொதுப் பேரணியில் மக்கள் கலந்து
கொள்ளுமாறு ஹாங்காங் கிறிஸ்தவக் குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சீர்திருத்தங்கள்
அங்கீகரிக்கப்பட்டிருப்பதை வைத்து, அரசியல் அமைப்பு ஒருபொழுதும் மாறாது என்று அர்த்தமல்ல,
எனவே ஜனநாயகத்திற்காகத் தொடர்ந்து போராட வேண்டுமெனப், பத்து கிறிஸ்தவக் குழுக்களின் கூட்டமைப்பில்
ஒன்றான கத்தோலிக்க அமைதி மற்றும் நீதிக் குழு கூறியது.
ஜூலை ஒன்றாந்தேதி, சீனாவிடம்
ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட நினைவு நாளாகும்.
ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்த
விதிமுறைகளை 44 விழுக்காட்டுப் பொதுமக்கள் மட்டுமே ஏற்றுள்ளனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.