ஜெர்மனியில் உள்ள பல்கலைக் கழகத்தில் திருத்தந்தையின் பெயரால் பேராசிரியர் பதவி ஒன்று
உருவாக்கப்படும்
ஜூன்24,2010 ஜெர்மனியில் உள்ள Regensburg என்ற பல்கலைக் கழகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
பெயரால் பேராசிரியர் பதவி ஒன்று உருவாக்கப்படும் என்று வத்திக்கானிலிருந்து வெளியாகும்
L’Osservatore Romano பத்திரிக்கை கூறுகிறது. திருத்தந்தையின் முன்னாள் மாணவர்கள்
ஒன்று சேர்ந்து உருவாக்கும் இந்த பதவிக்கு இறையியல், தத்துவ இயல் இவைகளில் சிறந்தவர்கள்
தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும் இந்தப் பதவியில் ஒருவர் ஐந்தாண்டுகள் நீடிக்கலாம்
என்றும் இப்பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது.திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பல ஆண்டுகளுக்கு
முன் Regensburg பல்கலை கழகத்தில் திருச்சபை கோட்பாடுகள் மற்றும் கோட்பாடுகளின் வரலாறு
என்ற துறையில் தலைவராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.