2010-06-22 14:44:55

பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்தவருக்கு ஆதரவை வழங்கியுள்ளது பாகிஸ்தான் திருச்சபை.


ஜூன் 22, 2010.இறைவாக்கினர் முகமதுவை பழித்தார் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் கிறிஸ்தவர் ஒருவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக தன் குரலை எழுப்பியுள்ளது தலத்திருச்சபை.

மூன்று மாதங்களுக்கு முன் இறைவாக்கினரைப் பழித்ததாக இஸ்லாமியர் ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட ரெஹ்மத் மாஸிஹ் என்ற 73 வயது கிறிஸ்தவ முதியவரை தேவ நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பாகிஸ்தான் காவல்துறை.

நிலத்தகறாரைப் பின்னணியாகக்கொண்ட இவ்வழக்கில் இக்கிறிஸ்தவர் மீது பொய்க்குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்ற ஃபைசலாபாத் குருகுல முதல்வர் குரு கலித் ராஷி அஸி, மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை அக்கிறிஸ்தவரின் வழக்கில் உதவும் என்றார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள கிறிஸ்தவரின் கிராமத்தைச் சார்ந்த பலர் தற்போது தேவ நிந்தனை சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் குரு.அஸி மேலும் கவலையை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.