இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குருக்களுக்காக 40மணி நேர ஆராதனை.
ஜூன் 22, 2010. குருத்துவம் எனும் கொடைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதற்கும், குருக்கள்
என்றென்றும் தங்கள் அழைப்புக்கு விசுவாசமாய் இருப்பதற்கும் என 40 மணி நேர ஆராதனை வழிபாட்டை
இந்தியாவின் பல்வேறு நகர்களில் நடத்தியுள்ளது பெண் துறவு சபை ஒன்று.
40 மணி நேர
தொடர் ஆராதனையை மேற்கொண்டது ஏதோ ஒரு சாதனையை மனதிற்கொண்டல்ல, மாறாக பழைய, புதிய ஏற்பாடுகளில்
காணப்படும் அவ்வெண்ணிக்கையின் முக்கியத்துவத்தை மனதிற்கொண்டே என்றார் அச்சபை சகோதரி ஃப்லாவியா
அரன்ஹா.
பங்களூரு, மும்பை, கோழிக்கோடு, நெல்லூர், டூரா ஆகிய இடங்களில் இந்த ஆராதனை
வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்த Sister Disciples of the Divine Master என்ற பெண் துறவு
சபை உரைக்கையில், குருக்களுக்காகத் தொடர்ந்து ஜெபிக்கவேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக
இந்த வழிபாடு இருந்தது என அறிவித்தது.