இறைவனில் வாழ அழைப்புப் பெற்றுள்ளார்கள் குருக்கள் என்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஜூன் 21, 2010 இறைவனில் வாழ அழைப்பு பெற்றிருக்கும் குருக்கள் அனைவரும் ஜெபத்தில்
தங்களை ஆழப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோமை
மறைமாவட்டத்திற்கென 14 குருக்களை இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காவில் திருநிலைப்படுத்திய
திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசுவோடு ஜெபத்தில் வாழ்ந்திருந்த அப்போஸ்தலர்கள்,
ஏனையவர்களால் காணமுடியாததைக் காண அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இயேசுவின்
புதிய முகத்தை ஜெபத்தில் மீண்டும் கண்டுகொள்ள ஒவ்வொரு குருவும் அழைக்கப்பட்டுள்ளார் எனவும்
எடுத்தியம்பிய பாப்பிறை, இயேசுவோடு நெருங்கிய உறவு கொள்வோரே அவரால் கவர்ந்திழுக்கப்பட்டு
ஏனையோருக்கும் இயேசுவை எடுத்துச் செல்பவர்களாக அனுப்பப்படுகிறார்கள் என்றார்.
குருக்களின்
மேய்ப்புப் பணியோடு இணைந்து செல்வதாக, அதன் மையப்பகுதியாக 'இறைவனில் வாழ்வது' என்பது
இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.