2010-06-19 14:43:43

யாழ்ப்பாணம் மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்.


ஜூன்19,2010 இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கும் சொத்துக்கள் இழக்கப்படுவதற்கும் காரணமான தவறுகள் திருத்தப்படுமாறு அந்நகர் மக்கள் அரசைக் கேட்பதாக, அங்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரு குழு கூறியது.

இலங்கை தேசிய மீனவர் தோழமை இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருமைப்பாட்டுப் பயணத்தில் பங்கு கொண்ட 52 பேர் யாழ்ப்பாண மக்களின் வேண்டுகோள்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை முன்னேற்றுவதில் கருத்தாய் இருக்கிறது, ஆனால் அரசுக்கு மனிதாபிமான வளர்ச்சியில் அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை என்று அக்குழுவினரிடம் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.