2010-06-19 14:39:01

மேற்கு ஆப்ரிக்காவில் ஒரு கோடிப்பேர் கடும் பசிக் கொடுமையை எதிர்கொள்கின்றனர்


ஜூன்19,2010 மேற்கு ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் ஏறக்குறைய ஒரு கோடிப்பேர் கடும் பசிக் கொடுமையை எதிர்கொள்கின்றனர் என்று சர்வதேச காரித்தாஸ் எச்சரித்துள்ளது.

இப்பகுதிக்குச் சர்வதேச சமுதாயம் உணவு உதவியை வழங்கவில்லையெனில் இப்பகுதி கடும் மனிதாபிமானப் பேரிடரைச் சந்திக்கும் என்றும், பல கத்தோலிக்க நிவாரண நிறுவனங்களின் கூட்டமைப்பான சர்வதேச காரித்தாஸ் கூறியது.

இது குறித்துப் பேசிய, நைஜர் காரித்தாஸ் நிறுவனப் பொதுச் செயலர் Raymond Yoro, நைஜரில், 3,78,000 சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றார்.

சாஹெல் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான நைஜரில் எண்பது இலட்சம் பேர் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.