பெண்கள் பயன்படுத்தப்படுவது குறித்து ஆசிய ஆயர்கள் பேரவை கவலை
ஜூன்19,2010 மனித வியாபாரம், பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களால் பாதிக்கப்படுவோருக்கு
அதிக உதவிகள் தேவைப்படுவதாக கிழக்கு ஆசிய ஆயர்கள் பேரவையின் பொதுநிலை அப்போஸ்தலத்துவ
அமைப்பு கூறியது.
இந்த அமைப்பு அண்மையில் நடத்திய பெண்கள் குறித்த கருத்தரங்கில்,
பெண்கள் பலவகைகளில் பயன்படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில்,
ஹாங்காங், ஜப்பான், கொரியா, மக்காவோ, தாய்வான் ஆகிய நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பாலியல் பலாத்காரங்களில் பாதிக்கப்படுவோருக்கு
ஆசியத் திருச்சபைகள் உதவுமாறும், திருச்சபையில் பாலியல் குறித்த விழிப்புணர்வு இருபாலாருக்கும்
கொடுக்கப்பட வேண்டுமெனவும் இதில் பரிந்துரைக்கப்பட்டது.