"இது உண்மையிலேயே ஒரு பிரமாதமான கண்டுபிடிப்புதான். ஆனால், இதை யார் பயன்படுத்த விரும்புவார்கள்
என்று தெரியவில்லை." 1876ல் அலெக்சாண்டர் க்ரஹாம் பெல் தான் கண்டுபிடித்த தொலைபேசியை
அப்போது அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Rutherford Hayes என்பவரிடம் காட்டியபோது, அவர்
இப்படிச் சொன்னார். ஆனால், அடுத்த ஆண்டே 1877, ஜூன் 20 அலெக்சாண்டர் கிரகாம் பெல்
உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
இன்று தொலை பேசி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். இதே போல்,
வாழ்வில் நாம் பயன்படுத்தும் பல கண்டுபிடிப்புகள் குறித்து தவறான கணிப்புகள் எழுந்தன.
அவைகளில் ஒரு சில:
1873ல் Sir John Ericksen என்பவர் சொன்னது இது:
"அறுவை சிகிச்சை செய்பவர்கள் வயிறு, இதயம், மூளை இவைகளைத் தொட மாட்டார்கள்." 1901ல்
பறக்கும் சோதனையை மேற்கொண்டு தோல்வி கண்ட Wilbur Wright சொன்னார்: "இன்னும் 50 ஆண்டுகளுக்கு
மனிதன் பறக்க முடியாது" என்று. இதைச் சொல்லி இரு ஆண்டுகள் கழித்து Wright சகோதரர்கள்
முதல் முறையாக வெற்றிகரமாகப் பறந்தனர். 1936ல் New York Times பத்திரிகையில் வந்த
ஒரு வாக்கியம் இது: இவ்வுலகைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தைத் தாண்டி, ராக்கெட் போக
முடியாது. 1899 ல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் வழங்கும் நிறுவனத்தில் பணி
புரிந்த Charles Duell என்பவர் சொன்னது இது: "கண்டுபிடிக்க வேண்டியதெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு
விட்டன. இனி உலகில் கண்டு பிடிக்க எதுவும் இல்லை."
நம் உலகைப் பற்றி நாம்
கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. தொடர்வோம் நம் கல்வியை.