ஜூன் 17, 2010 அருட்தந்தை சேவியர் வேதம் சே.ச. அவர்கள், இந்த ஜூன் மாதம் முதல் கருமாத்தூர்
புனித அருளானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணியைத் தொடங்கியுள்ளார். இந்தக் கல்லூரியை
இயேசு சபையினர் கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர் இதற்கு முன்னர் சென்னை இலொயோலா
கல்லூரியின் துணைமுதல்வராகவும் சமூகவியல் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் புறசேவை மையம் என்ற
ஓர் அமைப்பை உருவாக்கி கடந்த பத்து ஆண்டுகளாக அதனை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கின்றார்