2010-06-17 15:08:59

சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை ஐ.நா. உயர் மட்ட அதிகாரிகள்


ஜூன்17,2010 சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துதல், அல்லது போர்ச் சூழ்நிலையில் அவர்களைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், அவர்களது உடலுக்கும், உயிருக்கும் ஊறு விளைவித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகள், குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடம் அந்நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் சென்ற மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமேரிக்கா ஆகிய நாடுகளில் சிறுவர், சிறுமிகளை போர் படையில் ஈடுபடுத்தும் 16 குழுக்களை அடையாளப்படுத்தினார்.
இந்தக் குழுக்களைப் பல வழிகளிலும் கட்டுப் படுத்தும், அல்லது தடை செய்யும் பொறுப்பு அரசுகள் மற்றும் பல்வேறு உலக நிறுவனங்களுக்கு உண்டு என்று ஐ.நா.பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியான ராதிகா கூமாரஸ்வாமி கூறினார்.
கடந்த ஒரு வாரமாக மத்திய அப்பரிக்காவின் ஆறு நாடுகளிடையே சிறார் படைவீர்கள் குறித்து நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள இந்த வேளையில், ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடமிருந்து வந்துள்ள இந்த கோரிக்கை குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.