2010-06-15 08:22:39

லஞ்ச ஊழல்களிலிருந்து முழு விடுதலைப் பெற மக்களுக்கு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வேண்டுகோள்.


ஜூன் 14, 2010. லஞ்ச ஊழல்களிலிருந்தும் பிரிவினைவாதங்களிலிருந்தும் முழு விடுதலைப் பெறுவதே உண்மையான விடுதலை என சுதந்திர தினத்திற்கானச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.

உண்மை விடுதலை என்பது பாவங்களிலிருந்து விடுதலைப் பெறுவதே என்ற பிலிப்பீன்ஸ் பேராயர் Diosdado Talamayan, ஆகவே லஞ்ச ஊழல்களிலிருந்து விடுதலை பெறுவது முக்கியக் கூறாகிறது என்றார்.

பிரிவினைவாதங்களை வெற்றி கண்டு, மதம், மாநிலம், கட்சி சார்பு என்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் சேவையாற்ற வேண்டிய கடமையை புதிய அரசு உணர்ந்துச் செயல்படுத்த வேண்டும் என்றார் மணிலா பேராயர் கர்தினால் கௌதென்ஸியோ ரொசாலெஸ்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இருந்ததை விட தற்போது அதிகச் சுதந்திரத்துடன் மக்கள் வாழ்கின்ற போதிலும் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் செயல்படுத்தப்பட வேண்டியது என்றார் அந்நாட்டு ஆயர் ஹோஸே ஒலிவெரோஸ்.

ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் அடைந்ததன் 112வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் இத்திங்களன்று பிலிப்பீன்சில் இடம்பெற்றன.








All the contents on this site are copyrighted ©.