2010-06-15 08:21:01

புனித அந்தோனியார் திருத்தலத்தின் 175வது ஆண்டு ஜூபிலிக் கொண்டாட்டங்களையொட்டி சிறப்புத் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.


ஜூன் 14, 2010. இலங்கையின் கொச்சிக்கடே புனித அந்தோனியார் திருத்தலத்தின் 175வது ஆண்டு ஜூபிலிக் கொண்டாட்டங்களையொட்டி சிறப்புத் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

சனியன்று இச்சிறப்புத் தபால் தலையை வெளியிட்ட இலங்கை தபால் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்கா, முதல் தபால் தலையை கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித்திடம் ஒப்படைத்தார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட கொச்சிக்கடே புனித அந்தோனியார் திருத்தல விழாவில் தமிழ்த் திருப்பலியை திரிகோணமலை பட்டிகோலா ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளையும், சிங்களமொழித் திருப்பலியை பேராயர் மால்கம் ரஞ்சித்தும், ஆங்கிலத் திருப்பலியை இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரியும் நிறைவேற்றினர்.








All the contents on this site are copyrighted ©.