2010-06-11 15:41:48

எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கு நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவது அவசியம் – திருப்பீட அதிகாரி


ஜூன் 11,2010 எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கான நடவடிக்கைகள், நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவதன் வழியாக, அந்நோய்க்கான அடிப்படை காரணங்களைக் களைவதாய் இருக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் கேட்டுக் கொண்டார்.

எய்ட்ஸ் நோய் குறித்த ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வில் உரையாற்றிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்ய வேண்டுமானால், அந்நோய்க்கான மூலகாரணங்கள் அகற்றப்பட வேண்டும் மற்றும் அந்நோயாளிகள் மீது அன்பு காட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

உலகில் தினமும் 7,400 பேர் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர், தற்சமயம் ஏறத்தாழ 40 இலட்சம் பேர் இந்நோய்க்கான சிகிச்சை பெறுகின்றனர், அதேசமயம் 97 இலட்சம் பேருக்கு சிகிச்சை தேவைப்படுகின்றது, இரண்டு பேருக்கு சிகிச்சை தொடங்கும் பொழுது ஐந்து பேர் புதிதாகத் தாக்கப்படுகின்றனர் என்றும் பேராயர் மிலியோரே சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.