2010-06-08 16:10:57

சட்ட உதவி மையம் ஒன்றைத் திறந்துள்ளது மங்களூர் மறைமாவட்டம்


ஜூன்08,2010 பொதுமக்களுக்கான மறைமாவட்ட சட்ட உதவி மையம் ஒன்றை இத்திங்களன்று ஆசீர்வதித்துத் திறந்து வைத்தார் மங்களூர் ஆயர் Aloysius Paul D' Souza.
மங்களூர் கிறிஸ்தவச் சமூகத்திற்கான சட்ட உதவிகளையும், கல்வி மற்றும் வழிகாட்டுதல் பணிகளையும் மனதில் கொண்டு இச்சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளதாக உரைத்த ஆயர், சட்டப்பிரச்சனைகளை எதிர் நோக்குபவர்களுக்கு இத்தகைய மையங்கள் ஓர் அத்தியாவசியத் தேவை என்றார்.மோதல்களில் ஈடுபடுபவர்களிடையே இணக்கமானத் தீர்வைக் காண உதவவும், மங்களுர் மறைமாவட்டத்தின் ஒவ்வொருக் கிறிஸ்தவருக்கும் அடிப்படை சட்ட அறிவை வழங்கவும்,, புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தரவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டங்களை ஊக்குவிக்கவும், என்ற நோக்குடன் இம்மறைமாவட்ட சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.